
மெக்சிகோவில் மக்களைப் பயமுறுத்தப் பயன்படுத்தப்பட்ட பொம்மைக்குப் போலீசார் விலங்கு மாட்டிய சம்பவம் நடந்துள்ளது. கார்லஸ் என்பவர், ‘சக்கி டால்’ (Chucky Doll) என்ற பேய் பொம்மையை வைத்துப் பொதுமக்களைப் பயமுறுத்தியுள்ளார்.
பொம்மை கையில் கத்தியை வைத்துச் சாலையில் போவோர் வருவோர் மீது தூக்கி வீசிப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தக் குற்றத்திற்காகப் போலீசார், அவருடன் சேர்த்து பொம்மையையும் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையத்தில் குற்றவாளிபோல், பொம்மைக்கு விலங்கு மாட்டிப் புகைப்படம் எடுத்தனர். இதுதொடர்பான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
Chucky Doll Arrest

