வீடியோ காலில் நலம் விசாரித்த முதல்வர்!

Advertisements

கடலூர்:

சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் 1,70,000 கன அடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்குத் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

இதனை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலமாகப் பேசினார்.

அப்போது வெள்ள பாதிப்புகுறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உங்களுடன், எம்.எல்.ஏ மேயர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சரை காண்பித்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் யாரும் அச்சப்பட வேண்டாம்.

நீங்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்ட அனைவரும் உங்களுக்குத் தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் உடனடியாகச் செய்து தர உத்தரவிட்டுள்ளேன் எனப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அமைச்சருக்கு வீடியோ கால் மூலமாகப் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *