Advertisements

போதை பொருள் விவகாரம் குறித்து கண்காணிக்காமல் இருந்ததற்காக 15, காவல் ஆய்வாளர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட இடங்களில் போதை பொருள் விவகாரம் குறித்து கண்காணிக்காமல் இருந்ததற்காக 15, காவல் ஆய்வாளர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, ஓட்டேரி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருபாநிதி, மீனம்பாக்கம் காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் காவல் ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் காவல் ஆய்வாளர் கண்ணகி ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisements


