
சென்னை புறநகர் ரெயில் சேவைகள் இன்றும் நாளையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. நாளையும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணிவரை ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.
சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் ரெயில்கள் இயக்கப்படும்.
