அமைச்சர் பதவி பறிபோகிறதா? – முதல்வர் விஜய் எடுத்த அதிரடி ஆக்சன்.!

Advertisements

முதல்வர் விஜய் அமைச்சரவையில் மனிதவளத்துறை அமைச்சராக உள்ள கில்லி சரத்தான் கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளை பயன்படுத்துவதை போல அவர் வெளியிட்டிருந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தவெக.

இதனால் அமைச்சத் சரத்தை பதவி நீக்கக்கோரி திமுக மாணவரணி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது.. இந்த நிலையில், தவெக முகாமுக்குள்ளும் அமைச்சர் விவகாரம் புயலை கிளப்பியிருப்பதாக கிசு கிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக முதல்வர் காலையில் மாரத்தான் ஓடி அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.,

அடுத்த சில மணி நேரங்களிலேயே அமைச்சர் கில்லி சரத்தின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி கட்சி மீதும் முதல்வர் மீதும் கடும் விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டது. வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய்யை வேறு ஊற்றிவிட்டார் அமைச்சர். விவகாரம் இணையத்தில் படு வைரலாக விஷயம் முதல்வரின் கவனத்தையும் எட்டியிருக்கிறது.

அவரே அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடிந்து கொள்ளவும் செய்திருக்கிறார். முதல்வரின் கடும் அப்செட்டை வைத்துதான் சரத்தை அமைச்சரவையிலிருந்து நீக்க போகிறார்கள் எனும் கருத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக பதறிப்போன சரத், மனைவி குழந்தையோடு கிரீன்வேஸ் சாலையில் உள்ள செண்பகம் இல்லத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

விளையாட்டாய் செய்ததை வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி அரசியல் ஆக்குகிறார்கள். தளபதியிடம் எடுத்துக்கூறுங்கள் என மனம் வருந்தி பேசியிருக்கிறார். ஆனால், பொதுச்செயலாளர் சரத்திடம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என தெரிகிறது. விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு. அவர் எடுக்குறதுதான் முடிவு என கறாராக கூறியிருக்கிறார். எங்கே தனது பதவி பறிபோய்விடுமோ என்ற பரிதவிப்பில் செண்பகம் இல்லத்தை விட்டு கிளம்பினார் சரத்.

அதற்கேற்றார் போல கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ம் தேதி இரவு கூடுவாஞ்சேரியில் முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சரத் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தலைமையின் உத்தரவின் பேரில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.

அமைச்சர் சரத்தின் இந்த செயலால் தவெக அரசுக்கு நெருக்கடி அளித்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று சரத்தின் மொபைல் போனில் எடுக்கப்பட்ட மற்ற போட்டோக்கள் அதோடு சரத் பயன்படுத்திய மாத்திரை அவருடன் இருந்தவர்கள் யார் என முதல்வர் விஜய் அலுவலகத்திலிருந்து அமைச்சர் சரத்திடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் உளவுத்தறை வாயிலாகவும் ரகசியமாக தகவல் திரட்டப்படுக்கிறது. அத்துடன் அமைச்சர் பாங்காக் சென்று வந்தபோது வெளியிட்ட வீடியோ புகைப்படங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அவற்றை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது இப்படி போய்கொண்டிருக்கையில் இந்த விவகாரம் திமுகவுக்கு அல்வா சாப்பிடுவது போல் அமைந்துள்ளதால் கையிலெடுத்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. இந்த நேரத்தில் சரத் மீது நடவடிக்கை என இறங்கினால் அரசியல்ரீதியாக அவர்களின் கை ஓங்கிவிடும். அதனால் 2-3 மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றத்தை செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் தரப்புக்கு சீனியர்கள் சிலர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஆனாலும் இறுதி முடிவு முதல்வரின் கையிலேயே இருக்கிறது. ஆக தவெக அரசிலிலுள்ள 35 அமைச்சர்களில் ஒரு தலை உருளுவது உறுதி..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *