முன்னாள் அமைச்சர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!

Advertisements

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நிறுவனங்கள், அரசுத் துறைகளில் வேலை வழங்குவதாகக் கூறி 33 பேரிடமிருந்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மேல்மட்ட விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. தற்போது, கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *