
3000 கன அடி நீர் திறக்க உத்தரவு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை மேலாண்மை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழ் நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விடக் காவிரி மேலாண்மை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீரை தமிழ் நாட்டுக்குத் திறந்து விடமாட்டேன் என்று கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் கர்நாடகாவிலும் கடை அடைப்புப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வந்த சூழலில், காவிரி மேலாண்மை கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமயில் டில்லியில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தமிழ் நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விடக் காவிரி மேலாண்மை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cauvery Water Regulation Committee

