
Swami Abhedananda
சுவாமி அபேதானந்தர் 1866 -ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார்.
இவரது பெற்றோர் ரசிக்லால் சந்திரர் – நயனதாரா தேவி. தேர்ந்த ஆன்மீகக் குருவைத் தேடிய காளி பிரசாத் சந்திரன் 1884 சூன் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சேவை செய்தார்.
1906 ஆம் ஆண்டு சூன் 29 ஆம் தேதியன்று இலங்கையிலிருந்து தூத்துக்குடி வந்து இறங்கிய சுவாமி அபேதானந்தருக்கு வ.உ.சிதம்பரனாரும் மற்ற பல தூத்துக்குடி பிரமுகர்களும் வித்தியாசமான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, ஆம் தேதி காலமானார். இன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமி அபேதானந்தர் பிறந்ததினம்.


