
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளைக் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி 48 மணி நேரத்தில தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 18-ந்தேதி பரவலாகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
லட்சத்தீவு, மாலத்தீவுகள் பகுதியில் மற்றொரு தாழ்வுப்பகுதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.

