Advertisements

பாகிஸ்தான் இராணுவத் தளபதியான அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாக, அந்நாட்டு அரசுப் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை ஜெனரல் சையத் அசிம் முனீரை பீல்ட் மார்ஷல் பதவிக்குப் பதவி உயர்வு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்., 17ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ‘இரு நாடு கோட்பாடு’ என மத அடிப்படையில் அசிம் முனீர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தான் பஹல்காம் தாக்குதலுக்குத் தூண்டுகோலாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அசிம் முனீருக்கு பாகிஸ்தான் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
Advertisements


