
சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடமிருந்து கே.பி.ராமலிங்கம் சால்வையை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியாகச் செயல்பட்டுள்ளார். இதற்கான காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மேடையில் யாரும் நிற்க வேண்டாமெனக் கே.பி.ராமலிங்கம் மிரட்டும் முறையில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
