
Andrea Jeremiah | Anel Meley Pani Thuli
அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் நடித்த ஆண்ட்ரியா படம்குறித்து கருத்து…

சினிமா பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். 36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி’யாக உள்ளார். தெலுங்கிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” என்ற பாடலைப் பாடியிருந்தார்.
இந்தப் பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் நடித்த ஆண்ட்ரியா படம்குறித்து கூறியதாவது:- அனல்மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடித்தபோது கூச்சமாக இருந்தது. இது புதுமையாகவும் இருந்தது. இந்தக் காட்சிகளைவிட என் நிஜ வாழ்க்கையில் இதைவிட பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆண்ட்ரியா இந்தப் படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

