பதவிக்கு பணம் வாங்கக்கூடாது நிர்வாகிகளை எச்சரித்த புஸ்ஸி ஆனந்த்

Advertisements

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கினாலும் இடையில் எந்தத் தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கிப் பயணிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்குப் பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாகத் தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது அக்கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள்மீது எந்தப் பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், நான் தெளிவாகச் சொல்கிறேன்… யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காகப் பணம் கொடுப்பவர்கள் என்றாலும் பணம் வாங்கினார்கள் என்றாலும் அவர்கள்மீது எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *