மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

Advertisements

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே மாணவிக்குப் பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்.

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லை என்ற நிலைக்குத் தமிழ்நாட்டை தள்ளியதற்கு தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *