Shashi Tharoor: முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ., நம்பிக்கை இழந்து நிற்கிறது!

Advertisements

திருவனந்தபுரம்: முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ., தற்போது நம்பிக்கை இழந்து நிற்கிறது; அவர்கள் தோல்வியை அறிந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாகத் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியதாவது: அனைத்து தேர்தல்களும் மக்களால் முடிவு செய்யப்படுகின்றன. மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்து என்னை மூன்று முறை திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றிப்பெற வைத்தனர்;

மீண்டும் ஒருமுறை இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற வைக்கத் தயாராகிவிட்டனர். வாரிசுரிமை வரிபற்றி எங்கள் தேர்தல் அறிக்கையில் எதையுமே குறிப்பிடவில்லை. நாங்கள் எங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம்.

வாரிசுரிமை வரி பற்றியோ, பெண்களின் தாலியை பறிக்கப்போகிறோம் என்றோ அதில் எங்காவது குறிப்பிட்டுள்ளதை பார்த்தீர்களா? பா.ஜ., தற்போது நம்பிக்கை இழந்து நிற்கிறது; அவர்கள் தோல்வியை அறிந்துள்ளனர். முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட ஏராளமான மக்கள் பா.ஜ., வுக்கு எதிராக இருப்பதை உணர்ந்துவிட்டனர். இது பா.ஜ., வுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியாலும், தோல்வி பயத்தாலும் பா.ஜ., இதுபோன்றெல்லாம் பேசி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *