
Actress Rachitha : சீரியல் உலகில், கடந்த 2007ம் ஆண்டு முதல் பயணித்து வரும் நடிகை தான் ரஷிதா மகாலட்சுமி, பெங்களூரில் பிறந்த அவருக்கு வயது 34.
கன்னட மொழியில் ஒலிபரப்பாகி வந்த “மேகா மந்தலா” என்ற நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கிய நடிகை ரஷிதா மகாலட்சுமி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “பிரிவும் சந்திப்போம்” என்ற நாடகத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரஷிதா மகாலட்சுமி, கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரியல் துறையில் பயணித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” இரண்டாம் பாகத்தில் நடித்து, அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற மகாலட்சுமி, தன்னோடு “பிரிவோம் சந்திப்போம்” நாடகத்தில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் நடிகர் தினேஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்பொழுது அவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் வாழ்ந்து வருகின்றார். தொடர்ச்சியாகப் பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் பிஸியாக நடித்தும் வருகின்றார்.


