
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில், ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோகைன் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில், மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஸ்ரீகாந்த் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



