Sivagiri Forest: வேட்டையாடச் சென்ற 7 பேர் கைது!

Advertisements

சிவகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேட்டையாடச் சென்ற ஏழு நபர்களைக் வனத்துறையினர் கைது செய்து அபதாரம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரக எல்கைக்குட்பட்ட கூடலூர் நெடும்பரம்பில் வேட்டையாடச் சில நபர்கள் சென்ற தகவல் அறிந்து சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர்.

அசோக்குமார், மற்றும் வனக்காப்பாளர்கள் முகமது அலி, பாரதிகண்ணன், அருண்மொழி பிரதீப், மாதுரிபானு, வனக்காவலர்கள் ஆனந்தன், மாரியப்பன் வேட்டைத் தடுப்புகாவலர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், யோகநாதன்.குருஆகியோர்தனிக்குழுவாகஅந்தப்பகுதியில்ரோந்துபணிமேற்கொண்டனர்.

அப்போது நெடும்பரம்பில் நெத்திலைட், வேட்டையாடப் பயன்படுத்தும் மின் மோட்டார். மற்றும் கம்புகளுடன் வேட்டையாடச் சென்ற.அருண்.ராஜா.சந்துரு கனிராஜ்.சுந்தரராஜன்   கனககுமார்.ராகுல்.

ஆகியோர்கள் வேட்டையாடச் சென்ற கும்பலைத் தடுத்து நிறுத்தப்பட்டு வேட்டையாட முயன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனஉயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட வனஅலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் Dr.R.முருகன்,  உத்தரவின் பேரில் நபர் 1-க்கு ரூ.15,000/- வீதம் 7 நபர்களுக்கு ரூ.1,05,000/-(ஒரு லட்சத்தி ஐந்தாயிரம்) மட்டும் இணக்கக்கட்டணம் விதிக்கப்பட்டது இச்சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *