ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடிப்பு!

Advertisements

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கைது செய்த சம்பவம் அரங்கேறியது.

ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *