
சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது, இப்போது ஜாமின் வழங்கினால் பாதிப்பு ஏற்படும் என சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றம் காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sathankulam Murder Case

