நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் – புகழேந்தி மனு!

Advertisements

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சியான திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். மற்ற முன்னணி கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

பெரியார்குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்திலும் பெரியார்குறித்து பேசி வருகிறார்.

மேலும், கட்சித் தலைவர்கள் கருத்துகளுக்குக் கடுமையான வகையில் பதில் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தடை செய்யக்கோரிய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் புகழேந்தி கூறியிருப்பது,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளைச் சீமான் பேசுகிறார்.

திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தி ஏராளமாகப் பேசுகிறார்.

பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைப் பேசிக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

அமைதியாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சீமானின் செயல்கள் உள்ளன.

கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற்று நாம் தமிழர் கட்சியைத் தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *