V. Narayanasamy: அமைச்சர் நமச்சிவாயம் மீது நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

தனது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்றார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை நிறுத்தி வைக்க வைக்க முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாராயணசாம, புதுச்சேரியில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இருக்கிறது என்று தவறான தகவலைச் சொல்லவில்லை அவர்களால் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், எனது வீட்டிற்கு வெடிகுண்டு வைத்தவர்கள் தற்போது சிறையில் உள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தால் ஒரு வார்த்தை மாற்றுக் கட்சிக்குப் போனால் ஒரு வார்த்தையென நிறம் மாறிப் பேசுவது தனது பழக்கம் இல்லை என்று குறிப்பிட்ட நாராயணசாமி, நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்தபொழுது அவருடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து இருக்கிறோம் அவரைக் கொள்ளை அடிக்க விடவில்லை என்பதால் தான் தற்போது அவர் பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவர் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது இல்லை என்றால் என்மீது வழக்கு போட வேண்டியதுதானே அந்த வழக்கைச் சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

ஆட்சியில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது இது எல்லாம் எதிர்க்கட்சி வேடிக்கை பார்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய அவர் தனது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவே அவர் பாஜகவிற்கு சென்றதாகத் தெரிவித்தார். இந்த ஆட்சியில் ஊழல் நடந்து வருகிறது அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம் ஆதாரம் கிடைத்தவுடன் அவற்றை வெளியிடப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *