
சீன டிரோன்களுக்கு அமெரிக்க மத்தியத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் காண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக டிரோன்கள், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என புகார் எழுந்த நிலையில், அமெரிக்க மத்தியத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டது.

