
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில், இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும், நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில், இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து முத்திரை பதிக்க வாழ்த்துவதாகவும், உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருப்பதாகவும், இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும், பயிற்றுநர்களுக்கும் பாராட்டுகள் என்று, அதில் தெரிவித்துள்ளார்.
