
உலக உணவு தினம்.
மனிதனின் முக்கிய தேவைகளில் முதன்மையானது உணவு. உயிர் நாடியும் கூட.
1979-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளான் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20 -ஆவது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பால் ரொமானி என்பவர் இத்ற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 150க்க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
பசியால் யாரும் வாடக் கூடாது என்பதற்காக நாடுகளில் கொண்டாடப்படுகிறது


