
ஜெர்மனியில் பொழிந்தக் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தக், கடும் பனிப்பொழிவின்போது பெடர்போர்ன் நகரில் உள்ள மார்ஷ்பெல் – லிட்ச்னா சாலை சந்திப்பில் வாகன விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


