Advertisements

திருவள்ளூர் :
திருவள்ளூரில், இளைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து, சடலத்தை முப்புதரில் வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நார்த்தவாடா முட்புதரில் இளைஞரின் சடலம் ஒன்று சரமாரியாக வெட்டபட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில், இறந்தவர், திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. இவர் நார்த்தவாடாவில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்த போது மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து முட்புதரில் வீசியுள்ளனர்.
இந்த, சம்பவம் தொடர்பாக திருவவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Advertisements
