
சென்னை:
தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியளவில் பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் (பிருந்தா திரையரங்கம் அருகில்) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
விழாவில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் வரவேற்றுப் பேசுகிறார். இவ்விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜோ.அருண், ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ், (தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை) டாக்டர் கதிரொலிமாணிக் கம் (இ.சி.ஐ. சென்னை பேராயர், இந்திய சுவிசேஷ திருச்சபை) நீதிபதி அக்பர் அலி, (முன்னாள் சென்னை ஐகோர்ட்டு நிதிபதி) பங்கு தந்தை சு.சுவர்ணராஜ் (தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்) த.இனிகோ இருதயராஜ் எம்.எஸ்., (தலைவர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்)


