
இந்தி மொழியிலும் பல போல்டான காட்சிகளில் ராதிகா ஆப்தே நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குத் திருமணம் நடந்தாலும் குழந்தை பிறக்கும் வரையில் திருமணமானவர் என்பதே தெரியாமல் ரகசியமாக வைத்து வந்துள்ளார்.
ட்ரான்ஸ்பரன்ட் உடையில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள பேபி பம்ப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 39 வயதாகும் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனை சேர்ந்த பிரபல வயலின் இசைக்கலைஞர் பெனடிக் டைலர் என்பவரைத் திருமணம் முடித்தார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்குத் தெரியாது.
இந்நிலையில் தற்போது அவர் அழகான பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாகத் தனது குழந்தையுடன் இவர் வெளியிட்ட போட்டோ கவனம் பெற்றது. இந்நிலையில் டிரான்ஸ்பரென்ட் உடையில் நிறைமாத கர்ப்பிணி புகைப்படங்களை ராதிகா ஆப்தே வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான பிரகாஷ்ராஜ் நடித்து இயக்கிய தோனி படத்தின் மூலமாக ராதிகா ஆப்தே அறிமுகமானார். கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக இவரது நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே உடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
இதே போன்று இந்தி மொழியிலும் பல போல்டான காட்சிகளில் ராதிகா ஆப்தே நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குத் திருமணம் நடந்தாலும் குழந்தை பிறக்கும் வரையில் திருமணமானவர் என்பதே தெரியாமல் ரகசியமாக வைத்து வந்துள்ளார்.
ரசிகர்கள் பலர் அவர் சிங்கிளாகத்தான் இருக்கிறார் என்று கருதி வருகின்றனர். இந்த நிலையில் அதிரடியாகத் தனக்கு பிறந்த குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ராதிகா ஆப்தே அதிர்ச்சி கொடுத்தார்.


