டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.!

இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.இதனையடுத்து இங்கிலாந்து தொடருக்கான அணி இந்த மாதம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.

ஆனால் டெஸ்ட் தொடரிலிருந்து தான் ஓய்வு பெறவிருப்பதாக விராட் கோலி முடிவெடுத்துள்ளதாகவும் பிசிசிஐ அவரிடம் அந்த முடிவை மாற்றிக்கொள்ள கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *