Advertisements

ஹராரேயில் நடைபெறுகிற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
ஜிம்பாப்வேக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், ஹராரே மைதானத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான வீரர்களும், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ரசா தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா? என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisements




