
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதமாக எழதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டின் அரிய வகைக் கனிமச் சுரங்கத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துகேட்பு தேவையில்லை எனும் மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சுரங்கங்கள் அமைப்பது என்பது சுற்றுசூழலைப் பாதிக்கும் என்றும் இதில், விலக்கு அளிப்பது உள்ளூர் சமூகத்தினரின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று தெரிவித்தார்.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனை செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்.




