
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தியும் இந்தத் தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது.
மேலும், முதலமைச்சர் விஜய் கவனத்தில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 7ஆம் தேதி பதிலளிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



