Advertisements

கோட்டூர்புரத்தில் தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கையாகும் மேலும் ஆறு மொழி தனக்கு தெரியும் என்றும் தாய்மொழி தமிழ் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு மூன்று அம்மாக்கள் பெற்றெடுத்த அம்மா இறந்துவிட்டார்கள் மிச்சம் இருப்பது என் சினிமா, இந்திய தாய் என்று கூறியுள்ளார்.
பின்னர், தன்னை யாரும் இடது பக்கமும் வலது பக்கமும் இழுத்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisements



