
வாஸிங்டன்:
பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாகக் கடந்த 10-ந்தேதி புறப்பட்டார்.
முதலில் பிரான்சுக்கு சென்ற அவர் அங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்குப் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் மோடி தலைமை தாங்கினார்.
மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்து பேசினார். 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வழியனுப்பி வைத்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தற்கு அவரைத் தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துயிருந்தார். இந்த அழைப்பை ஏற்ற மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
தனி விமானம்மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு, இன்று அதிகாலை மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டி ருந்தனர். அவர்கள் இந்திய-அமெரிக்க கொடிகளை அசைத்தபடி ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’ ‘மோடி மோடி’ எனக் கோஷமிட்டு உற்சாகத்துடன் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனுக்கு சென்றடைந்தேன். அதிபர் டிரம்பை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை கட்டி எழுப்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பெருமளவில் திரண்டனர். அவர்கள் இந்திய-அமெரிக்க கொடிகளை அசைத்து ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’, ‘மோடி மோடி’ என உற்சாகமாகக் கோஷமிட்டனர்.
மோடி அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது, வாஷிங்டனுக்கு சென்றடைந்தேன்.
அதிபர் டிரம்பை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நமது மக்களின் நலனுக்காகவும், நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும், நமது நாடுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
கடுமையான குளிர் இருந்தாலும், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் எனக்கு அற்புதமான வரவேற்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
பின்னர், பிரதமர் மோடி பிளேர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். இன்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பு இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் முக்கியமான விவகாரங்கள்குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில், எக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு இந்தியா அதிகளவில் எக்கு மற்றும் அலுமினியம் ஏற்றுமதி செய்கிறது. இதற்கான வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடைபெறும்.
இந்தியா மீது வரி சலுகை வழங்கவும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், இந்தோ-பசிபிக், உக்ரைன்-ரஷியா போர் மற்றும் மேற்கு ஆசியா நிலைமை ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் நடைபெறும்.
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே உறவுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன. பல சந்தர்ப்பங்களில், மோடியை டிரம்ப் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது முறையாக அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பல நாடுகளுக்கு வரிகள் விதிக்கின்றார்.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பு, இரு நாடுகள் இடையேயான உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அடுத்த கட்டமாக அமையும் என்றும், இந்தியாவுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
