புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!

Advertisements

வாஷிங்டன்:

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம்மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது.

தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த பெண் என்ற சாதனைக்குச் சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

மிகுந்த பாதுகாப்புடன் 9வது முறையாக நடந்த ஸ்பேஸ்வாக் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.

ஸ்பேஸ்வாக்கில் சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களைக் கழித்துள்ளார்.

சாதனை படைத்த சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *