இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலை நிறுத்தம்!

Advertisements

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சேசுராஜா, வியாகுலம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து விசைப்படகுகளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 32 மீனவர்களை கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *