Shocking: 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்!

Advertisements

குஜராத்தில் 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

காந்திநகர்: குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவன் மறைவுக்கு விஜாப்பூர் தொடக்கப் பள்ளியில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *