Serial Actress: அழகுக்கு ஏத்த ரேட்டு!

சென்னையில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாகச் சீரியல் நடிகைகளை வைத்து விபச்சாரம் தொழில் செய்து வந்த துணை நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களைக் கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காத சீரியல் நடிகைகள் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் இளைஞர் உள்ளிட்ட பலர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இதனையடுத்து  அப்பார்ட்மென்ட் பகுதிக்குள் நுழைந்து ரகசியமாகப் போலீசார் விசாரித்தனர். அப்போது 6 ஆண்டுகளாக விபச்சார தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. 

இவர்களைக் கைக்களவுமாகப் பிடிக்கப் போலீசார் ஒருவரை வாடிக்கையாளர்போலச் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25,000, துணை நடிகைகளுக்கு ரூ.10,000 என்று கூறியுள்ளார். குறிப்பாக முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பே புக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இப்போதைக்கு, தன்னிடம் ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருக்கிறார். அவருக்கு ரூ.10,000 கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

காவலர் ஒருவரை வாடிக்கையாளர்போல் முதலில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பினர். அவரைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது ஒரு சீரியல் நடிகை மட்டும் சிக்கினார். மேலும், பாலியல் தொழில் நடத்தி வந்த 50 வயது மதிக்கத் தக்க துணை நடிகையைப் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்த 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *