பெரியாரின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் திராவிட இயக்கங்கள் எவ்வளவு கடைப்பிடிக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாளையொட்டிச் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய சண்முகம், இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதிய வன்முறைகள், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகத் திராவிட இயக்கங்கள் பெரியாரிய சிந்தனையோடு அணுகுவது இல்லை என்று தெரிவித்தார்…

