Seeman speech: நயன்தாராவை கடத்துவதற்கு வீரப்பனுக்கு எவ்வளவு நேரமாகும்!

Advertisements

நாகப்பாவை தூக்கிய வீரப்பனுக்கு நயன்தாராவை கடத்துவதற்கு எவ்வளவு நேரமாகும் எனச் சர்ச்சையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை ஒட்டித் தேர்தல் கள நிகழ்விற்காகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சீமான், திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி பிரச்சனை பேசினார். அதில், வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை வந்திருக்குமா என்ற சீமான், வீரப்பன் இருந்தபோது காட்டில் இருந்த சந்தமன மரங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தன என்றார்.

மேலும், ”வீரப்பன் சந்தன மரத்தை வெட்டி வித்தாரு. சரி நான் ஒத்துக்குறேன். யானைகளைக் கொன்னு தந்தத்தை வித்தாரு. சரி அதையும் நான் ஒத்துக்குறேன். வித்தவரு காட்டுக்குள்ள இருந்தாரு. வாங்குனுவங்க எங்க இருந்தாங்கனு நானும் பல வருஷமா கேக்குறேன். யாரும் பதில் சொல்ல மாட்றான். சரி, வித்து என்ன பண்ணாரு. காட்டுக்குள்ள பெரிய பெரிய பங்களாவ கட்டுனாரா? நாட்டுக்குள்ள எத்தன பேரு சாராயம் வித்துட்டு இருக்கான்.

அவரு காட்டுக்குள்ள சாராயம் குடிச்சாரா? வெத்தல பாக்கு போட்டாரா? பீடி குடிச்சாரா? கட்டிய மனைவியைத் தவிர வேறு எந்தப் பொண்ணையாவது தூக்கிட்டு போனாரா? நாகப்பாவை தூக்குனவருக்கு நயன்தாராவை கடத்திட்டு போகத் தெரியாதா? அதுதான் தமிழன் மாண்பு. அந்த மாண்பு குறையாம வாழ்ந்தவரு அவரு. அவரு வெளியே வந்து பேசுனார்னா பல பேரு மாட்டிக்குவான். அதனால அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் வந்துச்சு” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக மாதனூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பதவி ஏற்காமல் இருக்கும் பட்டியலின பெண்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், சமூக நீதி, சனாதன ஒழிப்பு, பெரியார் மண் எனப் பேசும் திமுக அரசில் தேர்தலில் வெற்றிப்பெற்ற பட்டியலின பெண்ணிற்கு தற்போது வரை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *