
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையின் தடையை மீறித் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது.
தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
