Advertisements

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகப் பூஜையில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, அவர் அம்மன் சன்னிதானத்தில் உள்ள நவகிரகங்கள் மற்றும் சித்தரகுப்தர்களை வணங்கி வழிபட்டார். பின்னர், அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சரத்குமாருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Advertisements



