
Rotten Eggs on NH: பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சுங் கச்சாவடி அருகில் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங் களில் அழுகிய முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.
மேலும் அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அருகே உள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து வீசப்படுகிறதா, தேசிய நெடுஞ் சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து போடுகின்றனரா என்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் கழிவுகள், அழுகிய முட்டைகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்



