
இந்தோனேசியா நாட்டின் உயரிய விருதான, பிந்தாங் அடிபூர்ணா-ஆப்-தி-ரிபப்ளிக்-ஆப்-இந்தோனேசியா பதக்கத்தை, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ-சுபியாண்டோ அணிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடிக்கு, இந்தோனேசியா நாட்டின் உயரிய விருதான, பிந்தாங் அடிபூர்ணா-ஆப்-தி-ரிபப்ளிக்-ஆப்-இந்தோனேசியா பதக்கம் வழங்கப்பட்டது. இந்தோனே சியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ-சுபியாண்டோ அணிவித்தார். இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, எனக்கு மிகுந்த அன்போடும், மரியாதையோடும், இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது என்றும், இவ்விருது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சொந்தமானது என்றும், இது இந்தோனேசிய மக்களின் உணர்வுகளையும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆழமான பிணைப்பையும் பிரதிபலிக்கிறது எனவும், இந்தோனிசியா அதிபர் பிரபோவோ, இந்தோனேசிய அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர்நரேந்திரமோடி தெரிவித்தார்.


