Advertisements

கரை வழிமறித்து 5 கிலோ தங்கத்தை தூக்கிச்சென்ற கும்பல்!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாகக் கோவைக்குக் காரில் தங்கத்தை கொண்டு சென்றபோது வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்டது.
2 கார்களில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், பூலாம்பட்டி மேம்பாலம் அருகே தங்கத்தை கொள்ளையடித்தனர். தங்கத்தை பறிகொடுத்தவர்கள் காரிமங்கலம் போலீசில் அளித்த புகாரை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisements


