Puducherry Alcohol Shops: மது கடைகளில் அலைமோதிய ஆண்கள், பெண்கள்!

Advertisements

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் எனக் கூட்டம் அலைமோதியது.

ஆங்கில புத்தாண்டான 2024-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடந்தது. மக்கள் இனிப்பு, கேக்குகளை வழங்கிப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.

புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையைக் கடந்த காலங்களில் இரவு 12 மணிவரை மட்டுமே அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்துக் கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் எனக் கூட்டம் அலைமோதியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *