
ஜெயங்கொண்டத்தில் வீட்டில் பெண்களை வைத்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சந்திரா வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உடையார்பாளையம், சிதம்பரம், இலையூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சந்திராவை கைது செய்து பாலியல் தொழில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலீசார் அவர்கள்மீது வழக்குப் பதிந்து இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சந்திரா மீது போலீசார் வழக்குப் பதிவுக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சந்திராவிடமிருந்து 3100 ரொக்கமும், மது பாட்டில்கள், காண்டம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சந்திரா மீது ஏற்கனவே மூன்று விபச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



