
வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது. உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.
வேலூரில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கினார்.
பின்னர் அவர் மேலும் பேசியதாவது:-
என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்.. தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
பொது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தகாண்டில் தமிழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.
வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது.
வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருகன் பெருமானை நான் வணங்குகிறேன்.
வரலாற்று சிறப்பு கொண்ட வேலூர் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்க இருக்கிறது.
21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தி தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன.
உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.
விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.
உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலையம் அமையம் உள்ளது. சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது.

