
சென்னையில் பரபரப்பு!
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளிய வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முகப்பு வாயிலில் கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. Petrol Bomb
பெட்ரோல் குண்டு வீசியபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கருக்கா வினோத்தை சுற்றிவலைத்து கைது செய்தனர்.இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வினோத் என்ற ரவுடி இரண்டு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


